
வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் மேனன் தற்போது ப்ரதீக் பாப்பர், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் இணைகிறார் கௌதம். அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய். இப்படத்தினை கௌதமின் தயாரிப்பு நிறுவனமான PHOTON KATHAAS தயாரிக்க இருக்கிறது.
No comments:
Post a Comment